Sunday 25 July 2021

ஊஞ்சல்🎠 ஆடுவது எதற்காக....

 ஊஞ்சல்🎠 ஆடுவது எதற்காக.... காரணம் வேண்டுமா? இதை படியுங்கள்...!!

பாரம்பரிய ஊஞ்சல்...!!



🎠 தமிழ் பாரம்பரியத்தில் ஊஞ்சல் விளையாட்டானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். ஊஞ்சல் விளையாட்டினை சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என எல்லா வயதினை உடையவர்களும் ஆடுவார்கள். ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலும் சிறுவர்கள் மாத்திரமே ஆடுகின்றனர்.


🎠 குறிப்பாக வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.


🎠 ஊஞ்சல் மூன்று வகையாகும். அவை கிறுக்கு ஊஞ்சல், உத்து ஊஞ்சல், ஆட்டு ஊஞ்சல் என்பனவாகும். இன்று சிலருக்கு ஊஞ்சல் என்றால் என்ன என்பதுகூடத் தெரியாதவர்களே அதிகம்.


🎠 ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமைமிகு நிகழ்வுகள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.


ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா?


🎠 சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.


🎠 ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.



🎠 ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.


🎠 திருமணங்களில் 'ஊஞ்சல் சடங்கு" இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.


🎠 வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஊஞ்சல் ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.


🎠 கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.


🎠 இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுபவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.


🎠 ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.


🎠 கோபமாக இருக்கும்போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.


🎠 நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும்போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறுசுறுப்பாகிறது.


இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.....


மறக்காமல் வீடுகள்தோறும் ஊஞ்சல் ஆடுவோம்...

0 கருத்துக்கோவை:

Post a Comment