Sunday 29 December 2019

பசித்தால் மட்டும் உண்ணுங்கள்

 மருந்து மாத்திரைகளை புறக்கணிங்கள். பசித்தால் மட்டும் உண்ணுங்கள்.

 

 


நமது வயிற்றில் எந்த மிக்ஸி, கிரைண்டர் அல்லது அம்மி கல் இது போன்ற எதுவும் இல்லை, ஆனால் நாம் அவசர அவசரமாக கொஞ்சம் கூட மெல்லாமல் முழுசு முழுசா முழுங்குற எல்லாத்தையும் இந்த வயிறு பெர்பக்ட்டா அரைச்சு வெளியே தள்ளுதே எப்படினு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா?

உணவை ஜீரணம் செய்றதுக்காகவே வயித்துல இயற்கையாகவே HCL ஆசிட் சுரக்குது. அந்த ஆசிட்ல ஒரு சேவிங் ப்ளைட போட்டீங்கனா கூட அது கரைஞ்சு போய்டும்,  அந்த அளவுக்கு பவர் புல்லான ஆசிட் அது.

வயித்துல சுரக்குற HCLலுக்கும் கெமிக்கல் லேப்ல இருக்குற HCLக்கும் ஒரே வேதியியல் வாய்ப்பாடு தான்,  ஒரே குறியீடு தான், ஒரே பண்புகள் தான் ஆனால் லேப்ல இருக்குற HCL ல்ல வயித்துகுள்ள இன்ஜக்ட் பண்ணா என்ன ஆகும்னு தெரியுமா?

வயிறு, குடல் பூரா வெந்து போய்டும்.  ஏன்னா வயித்துல சுரக்குறது Bio அமிலம், லேப்ல தயாரிச்சது உயிர்ச்சத்து இல்லாத கெமிக்கல்.

இதே மாதிரி தான்,  உடம்புல விட்டமின் இல்ல, புரோட்டின் இல்ல, கால்சியம் இல்ல,  மக்னீசியம் இல்ல அப்படின்னாலும் அத உணவு வழியா தான் உடம்புக்கு கொடுக்கனுமே தவிர

பன்னாட்டு மெடிக்கல் மாபியாக்கள் தயாரிக்கும் ஆய்வக மருந்து மாத்திரைகள் மூலமாக அல்ல.

அப்படி லேப்ல தயாரிச்ச மருந்து மாத்திரை தின்னா என்ன ஆகும்னா... லேப்ல தயாரிச்ச HCL ஆசிட்ட ஒரு சிரஞ்சி வழியா வயித்துக்குள்ள இன்ஜக்ட் பண்ணா என்ன ஆகுமோ அதே தான் ஆகும். என்ன ஆசிட் அதோட தீவிரத்தால உடனே குடல வேக வைச்சுடும், இந்த மருந்து மாத்திரைகள் ஸ்லோவா, அலுங்காம குலுங்காம உங்க குடல காலி பண்ணிடும்.

அப்பறம் ஒரு அஞ்சு ஆறு வருசம் கழிச்சு One Fine day ல உங்களுக்கு இத்தன நாள் மருந்து மாத்திரை எழுதி கொடுத்த அதே டாக்டர் சொல்லுவாரு...

"தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்புட்டதால உங்க குடல் புண்ணாயிடுச்சு, ஒரு வேற கேன்சரா கூட இருக்கலாம், எதுக்கும் ஒரு பயாப்சி பண்ணி மும்பை லேப்க்கு அனுப்பி செக் பண்ணிடலாம்னு"

அப்பறம்...?

அப்பறம் என்ன?
அதே டாக்டர், கீமோ தெரபி ன்ற பேருல மறுபடி மருந்து உங்கட்ட காஸ்ட்லியான மருந்து மாத்திரைகள விக்க ஆரம்பிப்பாரு.

இதுக்கு மேல என்ன நடக்கும்னு நான் சொல்ல முடியாது. நீங்களே யோசிச்சு பாருங்க. உங்க பக்கத்து வீட்டுல, சொந்த பந்தம் வீட்டுல இத நடக்குதா இல்லையானு கவனிங்க.ப்ளீஸ்.

மருந்து மாத்திரைகளை புறக்கணிங்கள்.

பசித்தால் மட்டும் உண்ணுங்கள்

தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்துங்கள் (காய்ச்சல் சளி இருமல் தொந்தரவுகள் இருந்தால் மட்டுமே லேசான சூட்டில் வெந்நீர் அருந்த வேண்டும்)

உடலுக்கு தேவையான ஓய்வு அளியுங்கள்

உறக்கம் வருகையில் உறங்குங்கள், குறிப்பாக இரவில் நீண்ட நேரம் விழித்து இருக்காதீர்கள்

 பழங்கள், காய்கறிகள், கீரைகள் நிறைய எடுத்து கொள்ளுங்கள்

பழச்சாறு, சூப், தண்ணீர் நிறைய குடியுங்கள்

நிதானமான மனநிலையில் உங்களை வைத்திருங்கள்

நோய்கள் நிச்சயம் குணமாகும், உடல் கண்டிப்பாக மீண்டு வரும். அதற்கான சக்தி உடலுக்கு தரப்பட்டுள்ளது.

இது நம்புங்கள் நடக்கும் என்கிற பூச்சாண்டி லாம் கிடையாது. நம்பிக்கையே இல்லாமல் மேலே சொன்னவற்றை பின்பற்றினாலும் குணமாதல் நிச்சயம்.

ஏனெனில் இந்த ஆங்கில வணிக மயமாக்கப்பட்ட மருத்துவ முறைகளின் வயது வெறும் 150 ஆண்டுகள் தான்

ஆனால் மேலே சொன்ன முறைகளின் அடிப்படையில் தான் மனித சமூகம் பல்லாயிரம் ஆண்டுகளாக நோய்களிலிருந்து மீண்டு வாழ்ந்து வந்துள்ளது என்பதே இதற்கு சாட்சி.

நலவாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.

Leia Mais…

Thursday 1 August 2019

உலக தாய்ப்பால் வாரம்

 உலகம் முழுவதும் மகப்பேறு மருத்துவர்களால் இந்த வாரத்தில் தோராயமாக 540 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,நடத்தப்படுகின்றன. தனியார் தொண்டு நிறுவனங்கள், அரசு சார்பிலும் விழாக்கள் நடைபெறுகின்றன.

சர்வதேச அமைப்புகளான உலக சுகாதார அமைப்பு, குழந்தைகள் நல அமைப்பு ஆகியவை இந்த வாரத்தில் விழிப்புணர்வு பேரணி, பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றன.

1992ஆம் ஆண்டு ’வேர்ல்டு அலையன்ஸ் பிரஸ்ட் ஃபீடிங் ஆக்‌ஷன்’ (வாபா) அமைப்பால் முதல் முறையாக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டது.





ஒவ்வொரு ஆண்டும் இந்த வாரத்திற்கென ஒரு தீம் தேர்வு செய்யப்படும். உதாரணமாக கடந்த ஆண்டு ”தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி” என்ற தீம் உருவாக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் ஒரு தீம் உருவாக்கப்பட்டு, அதுகுறித்து பிரச்சாரங்கள் நடைபெறும்.

தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கவே இந்த வாரம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அதிகமாக தாய்ப்பால் குடித்து கொழுக் மொழுக் என்று இருக்கும் 6 மாத குழந்தைக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.



தாய்ப்பால் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்:

குழந்தை பிறந்த உடன் சுரக்கும் தாய்ப்பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

குழந்தை பெற்றெடுத்த ஆரோக்கியமான பெண்ணுக்கு தினமும் 850 மில்லி அளவு பால் சுரக்கும். இதனால் பெண்ணின் உடல் கூடுதலாக 600 கலோரிகள் செலவழியும். அதனால் தான் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவதால் நுண்ணறிவுத் திறனும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது. குழந்தைக்கு அடிப்படை ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.

தாய்ப்பால் கொடுப்பது குறித்து சில போலி நம்பிக்கைகள் உண்டு . அதில் மார்பக அளவை வைத்து தாய்ப்பால் சுரப்பை கணிப்பார்கள். ஆனால் அது முற்றிலும் தவறானது

தாய்ப்பால் கொடுப்பது குறித்த மூட நம்பிக்கைகள்:

தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை. சில பெண்களுக்கு மார்பகம் பெரியதாக இருக்கும். ஆனால், தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு மார்பகம் சிறியதாக இருக்கும். அதேநேரம் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்துதான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட ஒரு பெண்ணின் தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், அதுகுறித்து பாலூட்டும் தாய் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டுமாம்.

Leia Mais…

Tuesday 9 July 2019

பலம் தரும் லிச்சி!


  • இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம். 
  • பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.
  • லிச்சி பழம் இனிப்பான ரோஜா மலரின் வாசனை தரும். பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும். 
  • ஈரல் உடலின் பல்வேறு விஷங்களால் நொந்து போயிருக்கும். லிச்சியின் பழச்சாறு இந்த விஷத்தன்மையை குறைத்து ஈரலுக்கு உரம் ஊட்டும். 
  • தாகத்தை தணிக்கும். 
  • இந்தோனேஷியாவில் இதன் விதைகளை குடல்சார்ந்த நோய்களை குணப்படுத்தவும், மலேசியாவில் நரம்பு நோய்களை சரிப்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள். 
  • இதன் பூக்களும், வேர்ப்பட்டையும் தொண்டையில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்க பயன்படுகிறது.
  • புகைபழக்கம், பாக்கு பழக்கத்தினால் தொண்டைப்பகுதியை ரணப்படுத்தியிருப்பவர்கள் லிச்சி பழங்களை உண்பது நலம். 
  • சீனாவில் பூச்சி கடித்து விட்டால் லிச்சி மரத்தின் இலைகளை சாறு எடுத்து பிழிந்து விடுகிறார்கள்.
  • லிச்சி பழத்தில் உடலின் கட்டுமான உணவு என்று சொல்லப்படும் புரதம் 1.1 கிராம், 
  • தோல்தடிப்பாயும், சொரசொரப்பாகவும் மாறும் தவளைசொறி நோயை கட்டுப்படுத்தும் தாவர கொழுப்பு 0.2 கிராம், 
  • இன்றைக்கு பலருக்கும் அன்றாட பணியில் சிக்கலை ஏற்படுத்தும் மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும் நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லிகிராமும், கால்சியம் உடலில் சேர உதவும் பாஸ்பரஸ் 35 மிகி, உடல் வெளுத்து போவதை தடுத்து நிறுத்தும் இரத்த சிவப்பணுக்களின் கட்டமைப்புக்கு முக்கியமான இரும்பு சத்து 0.7 மிகி, 
  • நாக்கு வீங்குவது, சிவந்து பிளவுபடுதல், வாய்ஓரங்களில் வெடிப்பு உண்டாவதை தடுத்து நிறுத்தும் ரைபோபிளேவின் 0.06 மிகி, 
  • சளி உருவாகாமல் தடுத்து தலைசுற்றல், கிறுகிறுப்பை தடுக்கும் வைட்டமின் சி 31 மிகி, மக்னீசியம் 10 மிகி, பொட்டாஷியம் 159 மிகி, தாமிரம் 0.30 மிகி களோரின் 3 மிகி உள்பட எராளமான சத்துக்கள் லிச்சி பழத்தில் தாராளமாக உள்ளன.
  • அவ்வப்போது இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல்நலன் நிச்சயம் நன்றாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.
நன்றி: http://greenindiafoundation.blogspot.com

Leia Mais…

Tuesday 18 June 2019

இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பிறகு..

இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் 

 
(1) உயரத்திற்கேற்ற எடை தானாகவே வந்து விடும்.  களைப்பில்லாமல் நீண்ட நேரம் வேலை செய்ய உடலுக்கு தெம்பு கிடைக்கும்.

(2) தோல் மிருதுவாகவும், இலாஸ்டிக் தன்மையுடனும் சுருக்கமில்லாமலும் இருக்கும்.  மற்ற முறைகள் ( உடற்பயிற்சி, ஜிம், உணவுக் கட்டுப்பாடு,ம ருந்து மாத்திரை மூலம் எடை குறைப்பது போல் இந்த முறையில் தோலில் சுருக்கங்கள் விழாது.

(3) கூந்தல் மென்மையாக இருக்கும்.

(4) அழகு க்ரீம்கள், ஷாம்பூ, எண்ணெய் போன்றவை தேவையிருக்காது.  தேவைப்பட்டால் ஏதாவது தானிய மாவு (பாசிப் பயிறு, கடலை மாவு)  போன்றவற்றை ஷாம்பூவுக்கு பதிலாக உபயோகிக்கலாம்.  வெந்தயத்தை 8 மணிநேரம் ஊற வைத்து அரைத்து ஷாம்பூவாக உபயோகிக்கலாம்.   கூந்தல் மென்மையாவதுடன் உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.

சோற்று கற்றாழையை தோலை மிருதுவாக்கவும், கூந்தலுக்கு ஷாம்பூவாகவும் உபயோகிக்கலாம்.  கூந்தல் மென்மையாவதுடன் உடலும் கு ளிர்ச்சியாக இருக்கும். உள்ளிருக்கும் ஙுங்கு போன்ற பகுதியை நீரில் அலசி விட்டு உண்ணலாம்.  அது பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு களுக்கும், வெள்ளை படுதலுக்கும் ஒரு அரிய மருந்தாகும்.  இதை மிகவும் எளிதாக தோட்டங்களிலும், தொட்லிகளிலும் வளர்க்கலாம்.  மிகக் கு றைந்த அளவு தண்ணீரே போதுமானது.
 
(5) கண்கள் தெளிவாகவும் ஒளி விடக் கூடியதாகவும் மாறும்.
 
(6) நாக்கு வெள்ளை படலம் இல்லாமல் சுத்தமாக இருக்கும்.
 
(7) உடல் இறகு போல இலேசாக இருக்கும்.
 
(8) உடல் நம்மை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும்.  நாம் உடலை தூக்க வேண்டியதில்லை.
 
(9) நகங்கள் உடைவது நிற்கும்.  நகங்களில் வெள்ளை கோடுகள் விழாது.
 
(10) பற்கள் தற்போது உள்ளதை விட பலமடையும். ஈறுகளில் இரத்தம்   வடியாது.
 
(11) பொடுகு மறைந்து விடும்.
 
(12) நல்ல இரத்த ஓட்டத்தினால் ஈறுகள் கருப்பு நிறத்தில் இருந்து இள சிகப்பு நிறத்திற்கு மாறும்.
 
(13) கருவளையங்கள் மறையும்.
 
(14) புத்தி கூர்மையடையும்.
 
(15) மூச்சு சீராகவும் ஆழமாகவும் இருக்கும். மூச்சு இரைக்காது.
 
(16) இளமையாக் காட்சியளிக்கலாம்.
 
(17) புண்களில் சீழ் பிடிக்காது.  வலியிருக்காது.  விரைவில் இரத்தம் உறைந்து விடுவதால் இரத்த இழப்பு இருக்காது.
 
(18) குரல் இனிமையாகவும் மென்மையாகவும் மாறும்.
 
(19) உடலின் உள், வெளி உறுப்புகள் அனைத்தும் ஆற்றலுடையதாக மாறும்.
 
(20) அடர் கருப்பு நிறத் தோல் செந்நிற கருப்பாக மாறும்.

நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை

Leia Mais…

Wednesday 1 May 2019

மாதுளம் பழ ஜூஸ்

மாதுளம் பழ ஜூஸ் ஆக்ஸிஜனேற்றத்தை சீராக்கும்.



பொதுவாக இயற்கை பானங்களை விரும்புவோர் அனைவருமே பழச்சாறுகளை (ஜூஸ்) அதிகம் விரும்பி அருந்துவார்கள்.

எல்லா வகைப் பழங்களுமே உடலுக்கு உகந்தவைதான் என்றாலும் மாதுளம் பழத்திற்கு என்று எப்போதுமே தனி மவுசு உள்ளது.  

அதிலும் சமீப காலமாக மாம்பழ ஜூஸ், திராட்சைப் பழ ஜூஸ் போன்ற மற்ற ப்ழங்களின் ஜூஸ்களைக் காட்டிலும் மாதுளம் பழச் சாற்றில் அதிகளவிலான பலன்கள் உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன.  

இதனால் மாதுளம் பழச் சாறுகளின் விற்பனையும் மேலோங்கியுள்ளது.   

கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தரும் மாதுளம் பழத்தின் அளவிடற்கரிய சத்துகளையும், மருத்துவ பலன்களையும் சொல்லி மாளாது. தற்போது ஹோட்டல்கள், ஜூஸ் கடைகள், விருந்து-விழா நிகழ்ச்சிகள் என எல்லா இடங்களிலும் மாதுளம் பழ ஜூஸ்-க்கு தனியிடம் கிடைத்துள்ளது. 

உணவுத் துறையில் தற்போது மாதுளம் பழத்தை `சூப்பர் புரூட்என அழைக்கிறார்கள். ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது. 

முன்கூட்டியே வயோதிகம் ஏற்படுவதையும் மாதுளம் பழம் தடுக்கிறது. உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் இதன் மருத்துவ குணம் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுகிறது. 

அன்றாடம் மாதுளம் பழ ஜூஸ் அருந்தி வர, ஆண்களுக்கான ஆக்ஸிஜனேற்றத்தை அது சீராக்கும் என்றும், பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்று நோயை உருவாக்கும் செல்களை மாதுளம் பழம் அழிக்கும் தன்மை கொண்டது என்றும் தெரிய வந்துள்ளது. 

மேலும் சிறுநீர்ப் பையை சுற்றியுள்ள ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது. 

தவிர, குழந்தைப்பருவத்தில் நாம் நண்பர்களுடன் விளையாடிய நாட்களை நினைவுகூரும் தன்மையும் இந்த பழத்திற்கு உண்டு என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதில் மாதுளம் பழம் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை பல்வேறு நாளிதழ்களும், மருத்துவ இதழ்களும் வெளியிட்டு மாதுளம் பழத்தின் புகழை மேலும் பிரபலப்படுத்தி விட்டன.

நன்றி: வெப்துனியா தமிழ்

Leia Mais…